Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::  . -
5>&'5$ , 5'$
 4

CAT on the WALL

Saturday, December 30, 2006

கொடுங்கோலன் மேல் உனக்கென்ன கவலை?


நீதிமன்றம் பேரில் நிறைவேற்றப்பட்ட சதாமுடைய கொலை பற்றி இங்கு எழுதும் பலரும் முஸ்லிம், இடதுசாரி, ஜன்ரஞ்சக, ஏழை, ஈழ, உட்பட மிகிதமானோர் அவருடைய குற்றங்கள் பற்றி மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.

தனிநிலை பாதுகாக்கப்பட்ட, ஏகாதிபத்திய பின்புலன் இல்லாத, இறையான்மை கொள்கைகளை தாங்கிகளாக கொண்டியங்கும் மன்றத்தால் விசாரிக்கப்பட்டு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் கொண்டோர்களின் விருப்பம்.

எழுப்படும் கேள்வி என்னவென்றால்,
இந்த 'விருப்பத்தை' ஒரு noble appeal ஐ தன்னுடைய தனிப்பெரும் சுயநலத்துக்காக - ஒரு ஏகாதிபத்திய சக்தி ( சர்வதேச பிரச்சினைகளில் சுயநல அடிப்படையில் பலநிலைப்பாடுகள் கொண்ட சுயநலதேச சக்தி) பகடைக்காயாக பயன்படுத்தி, தன்னுடைய கோரமுகத்தை இதன் பின்னால் ஒளித்துக்கொண்டு வன்முறை அடக்குமுறை கொள்ளை ஆணவம் போன்ற கொள்கைகளை சத்தமில்லாமல் பரப்புகிறதே... இதனை அனுமதிக்கலாமா? என்பதே.


இந்த நிகழ்வில் தமிழ்மணம் ஊடாக மேலும் எழும் கேள்விகள்:

1. இதே ஏகாதிபத்திய சக்தி, கொடூர கொலை கற்பழிப்புகளை நடத்தியதன் காரணம் காட்டி, இனப்படுகொலைகாரன் நரேந்திரமோடிக்கு நுழைவு மறுத்த போது - இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', அன்றைக்கு, சார்பு ஊடகங்கள் மூலம், இந்தியா அவமானப்படுத்தப்பட்டதாக பிரச்சாரம் செய்தார்கள்.இதுதான் பேச நா இரண்டுடையார் போற்றி என்பதா?

2. எத்தனையோ செய்திகள் மூலம், உலகின் பல்வேறு கொடூரங்களுக்கு மூலகுசும்பன் 'பெரியரக்கன்' (காட் ப்லெஸ் பெரியரக்கன்) என காண்பித்தும், - இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', அதை பற்றி பகல் நோன்பு வைத்திருக்கிறார்கள். ஒருவேளை 'உயிர்களை கொல்வது பாவம் - அவை சிறியளவில் இருக்கும் வரை' என்ற புதுக் கருத்தை தாங்கள் நம்பும் இறைக் கொள்கைகள் புதிதாக சுவீரகரித்து கொண்டதாலா?

3. கார்டூன் மூலம் குசும்பு செய்து பின் எழுந்த ஆர்ப்பாட்ட நிலைக்கு ஆத்திரச் சாயம் பூசிய - நாகரீகமிக்க அடுத்தவர் நாகரீகம் மதிக்கும், அப்பாவியுமான 'உலக சமாதான தூதுவன்' (பொதுவாக, இவர் புகுந்த இடம் உருப்படாது) - ஈராக்கிய மக்கள் 'தியாகத் திருநாளில்' எழும்போது அதை 'வன்முறைத் திருநாளாக' வாழ்நாலெல்லாம் நினைக்கும்படி ஒரு ஏற்பாட்டை கார்டூன் கணக்காக செய்திருக்கிறது. இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', இதையும் கார்டுனிற்கு பல்லை காமிப்பதுதான் நாகரீகம் என்று அன்று பாடம் சொன்னது போல, இன்று இந்த சம்பவத்தை 'வந்து எங்களை காத்தாய் வடிவேலா!!' என இருகரம் சேவித்துக் கொண்டாடவேண்டுமென பாடம் சொல்வது ஏன்?

ஒருவேளை, மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் என்பது பேசும் விஷயத்தை பொருத்ததா?

காட் ப்லெஸ் ஆல்

Monday, May 22, 2006

தீண்டாமையால் பாதிக்கப்பட்ட 'தாழ்த்தப்பட்ட' ஜயராமனுக்கு ஆறுதல் கடிதம்

கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள், இந்திய சிறுபான்மையினரின் தீண்டாமை கொள்கையால் பாதிக்கப்பட்ட நண்பர் ஜயராமனுக்கு மகிழ்ச்சி அளித்து, அவரின் புண்பட்ட நெஞ்சை, ஒடுக்கப்பட்ட மக்களுடைய கருகும் வாழ்க்கையின் புகை விட்டும் ஆற்றும் விதமாக அமையும் என நம்புகிறேன்

நண்பர் ஜயராமனின் இந்த பதிவிற்கு இட்ட பின்னூட்டம்:இந்திய சமூகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களில் அவர்களின் மக்கள்தொகைக்கான விகிதாச்சாரத்தை விட அதிகமாக உள்ளவர்கள் முஸ்லிம்கள் என ஐ.நா 2003 பின்தங்கிய நாடுகளின் மனித வாழ்க்கைத்தரம் ஆய்வறிக்கை குறிக்கிறது. 2002-ல் வெளியான ஹிந்து பத்திரிகையின் சிறப்பு பகுதியில் சராசரி முஸ்லிமின் அவல வாழ்க்கை படம் பிடித்து காட்டப்படுகிறது. தமிழகத்தில் அரசு கணக்கின்படி 13% உள்ள முஸ்லிம் சமுதாயம் அரசு வேலை, கல்லூரி கல்வி இவற்றில், 2% க்கும் குறைவாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 30% தமிழக முஸ்லிம்கள் நடைபாதை, தள்ளுவண்டி தினசரி தொழிலாளர்களாக உள்ளனர். எஞ்சிய தொகையில் கணிசமான எண், சுயமாக ஏதொ ஒரு நிலையில்லாத தொழில் புரியும் இக்கட்டில் உள்ளனர்.

இந்துக்களின் மேல் தீண்டாமையை மேற்கொண்டு, மற்றவர்களை புறந்தள்ளி, மேற்கண்ட அற்புதமான ஒரு வாழ்க்கத்தரத்தை எட்டியுள்ளனர் இந்திய முஸ்லிம்கள்.கடலோர குப்பங்களிலும், நகரத்தின் சேரிகளிலும், கிராமத்தின் ஓரசாரங்களிலும், இந்துக்களின் உயர்சாதியிரை வராமல் தள்ளிவைத்து விட்டு தமக்கு மட்டுமே பட்டா போட்டு வாழ்வது முஸ்லிம்கள்தான்.

மேலும், பானைக்கு சோறு பதமாக, இவர்களின் தீண்டாமை காரணமாக, இந்தியாவின் தேசமுக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 0% மட்டுமே இருக்கின்றனர். எங்களின் கண்ணிற்கெட்டியவரையிலான சந்ததியில் முதல்முதலாக கல்லூரி வாசலில் கால்வைத்தவனாகவும், எங்களின் கண்ணிற்கெட்டியவரையிலான ஊர் முஸ்லிம்களில் உங்களை போன்று முஸ்லிம்களால் ஒடுக்கப்பட்டவர்களின் அழுகுரல் கேட்குமளவு உலக விஷயங்களை அறிந்தவனாகவும் விளங்க இந்துக்களின் மீது நான் சார்ந்த சமூகம் கொண்ட தீண்டாமைதான் காரணம்.

பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும், இன்னும் உலகமெங்கும், இந்துக்களின் மீது தீண்டாமை மேற்கொள்ளுவது உயர்தர வாழ்க்கை வாழும் இந்திய முஸ்லிம்கள்தான்.

உங்களை போன்ற 'உயர்குடி' பிஸ்தாம் ஐஸ்கிரீம் பேபிகளின் பார்வையில் நாங்கள் கையில் வைத்திருக்கும் கடலைமிட்டாய் கூட வெறுப்பு தரும் போது, அதை விட்டு தராமல், நீங்கள் தீண்டுவதை தடுக்க நினைக்கும் எங்களின் தீண்டாமை உங்களுக்கு அருவெருப்புதான்.இது போன்று தீண்டாமை செய்யாமல் நாங்கள் அணைத்துச் செல்லும் பேரன்பு கொண்ட மற்ற இந்துச்சகோதர்களுக்கு புரியும் 'உண்மையான' தீண்டாமை
அபூஆதில் பதிவில் இட்ட பின்னூட்டம்:

பதிவாளர் வைத்திருக்கும் மையக்கருத்துனுடைய வீரியத்திற்கு வலு சேர்ப்பது சிறக்கும். அதை விடுத்து டோண்டு, போலி டோண்டு, இஸ்ரேலிய கூட்டங்கள் என 'காலர் பிடிக்கும்' முறை, பதிவை நீர்க்க செய்ய வாய்ப்பளிக்கும். 'இஸ்லாமிய குப்பைகள் கிடைத்தால் என்கிருந்தாலும் அள்ளப்படும்' என்ற பலகையின் கீழ் முழுநேர மோசம் செய்து வரும் 'நேசத்தின்' போர்வையில் ஒளிந்திருப்பவரோடு, கணிசமான நேரங்களில் நல்ல கருத்துகளையும் எடுத்து வைக்கும் டோண்டு போன்றவரை ஒப்பிடுவதில் உடன்பாடில்லை.

'நேசம்' புகழ் மோசம் பல வேளைகளிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுவதாக 'தமாஷ்' பண்ணுவார். முஸ்லிம்கள் மேல் அவ்வளவு அக்கறை உள்ளவர், இந்த சமூகத்தில் பல தளங்களில் மிதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுடைய உண்ர்வுகளுக்கு வலு சேர்க்கும் விதமாகவோ, 'விழிப்புணர்வு' ஏற்படுத்தும் விதமாகவோ, துரும்பேணும் அள்ளி போட்டிருக்கிறாரா? உண்மையில் அதற்கு எதிர்ப்பு பறக்கும் இடங்களில், 'மோசங்களின்', 'ரவி சீனிவாஸங்களின்' அழுகுரல் வாக்குமூலம்தானே, இவர்களின் மூல விலாசங்களை புட்டு வைக்கிறது.

// ஒரு முஸ்லிமுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் தாய் தந்தையரை விட அதிக நேசத்துக்குரியவர்கள். அப்படியே ஒவ்வொரு மதத்தாருக்கும் இனத்தாருக்கும் யாரேனும் நேசத்துக்குரியவர்களாக இருக்கலாம். மறுப்பதற்கில்லை. எனவே, நாம் தமிழ் வலைப்பூ திரட்டி மேலாளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம், தாய் தந்தையர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் சம்பந்தப்படுத்தி மோசமாக எழுதுபவர்களின் பட்டியலில் இந்த மத துவேஷ காழ்ப்புணர்வாளர்களையும் வைக்க வேண்டும் என்பதைத் தான்.

//

ஒவ்வொரு பதிப்பிலும், தனிநபர் தாக்குதல் என்று இங்கு கண்டிக்கப்படும் விமர்சனங்களை விட மிக மோசமாக, தூதுவரை இகழ்ந்து, அவதூருகளையும், ஆபாசங்களையும் அள்ளி நிறைத்து குட்டிக்கரணம் போடும் இவர், அதேவேளையில், இவருடைய 'நம்பகத்தன்மையையும்' 'போலி கருத்துகளையும்' உணர்ந்து இவரை பொருட்டாக மதிக்காமல், 'வம்புகள்' வேண்டாமென்று விலகும் சகோதர்களை பார்த்து மருண்டு, 'முகமது என்றாலே புனிதம், பேசக்கூடாது என்று சண்டைக்கு வருகிறார்கள்' என, எல்லாம் செய்த பின்னும், உச்சஸ்தாயில் அலறி, எப்பாடுபட்டேனும் சகதிக்கு இழுக்க நினைக்கும் இந்த வாண்டுத்தனமான விஷமங்கள் கொள்ளை காமெடியை மிஞ்சும்.


// சரியாகப் புரிந்துகொண்டேன் என்று நான் அப்பதிவில் குறிப்பிட்டது, அவருடைய பதிவின் (உண்மையான) நோக்கத்தை புரிந்து கொண்டேன் என்பதே ஆகும் //

நண்பர் சிபியின் இந்த கூற்றைக்கூட கண நேரத்தில் அதே பதிவில் வில்லங்கமாக திசைதிருப்பும் இந்த 'நம்பகமானவர்' 'முஸ்லிம் விழிப்படைவதில் அக்கரையுடையவர்' பன்னூறு ஆண்டுகள் முந்திய இறைத்தூதுவரின் வாழ்க்கையை விமர்சிக்கும் விதத்தில் எந்த விதமான 'நம்பகத்தன்மையை' பெறுவார் என்பதை வாசிப்பவர்களிடமே விட்டு விடுகிறேன்.

அதே நேரத்தில், நண்பர் இறைநேசன் சொல்லியது போல 'மோச'குமாரர்களின் நெடுஞ்சாலை சினிமா போஸ்டர் பிரச்சாரத்தை கவனிப்பதில் நேரம் விரயம் செய்யாதீர்கள் என்பதை ஆமோதிக்கிறேன்.
தீண்டாமையால் பாதிக்கப்பட்ட 'தாழ்த்தப்பட்ட' ஜயராமனுக்கு ஆறுதல் கடிதம்

கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள், இந்திய சிறுபான்மையினரின் தீண்டாமை கொள்கையால் பாதிக்கப்பட்ட நண்பர் ஜயராமனுக்கு மகிழ்ச்சி அளித்து, அவரின் புண்பட்ட நெஞ்சை, ஒடுக்கப்பட்ட மக்களுடைய கருகும் வாழ்க்கையின் புகை விட்டும் ஆற்றும் விதமாக அமையும் என நம்புகிறேன்

நண்பர் ஜயராமனின் இந்த பதிவிற்கு இட்ட பின்னூட்டம்:

இந்திய சமூகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களில் அவர்களின் மக்கள்தொகைக்கான விகிதாச்சாரத்தை விட அதிகமாக உள்ளவர்கள் முஸ்லிம்கள் என ஐ.நா 2003 பின்தங்கிய நாடுகளின் மனித வாழ்க்கைத்தரம் ஆய்வறிக்கை குறிக்கிறது. 2002-ல் வெளியான ஹிந்து பத்திரிகையின் சிறப்பு பகுதியில் சராசரி முஸ்லிமின் அவல வாழ்க்கை படம் பிடித்து காட்டப்படுகிறது. தமிழகத்தில் அரசு கணக்கின்படி 13% உள்ள முஸ்லிம் சமுதாயம் அரசு வேலை, கல்லூரி கல்வி இவற்றில், 2% க்கும் குறைவாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 30% தமிழக முஸ்லிம்கள் நடைபாதை, தள்ளுவண்டி தினசரி தொழிலாளர்களாக உள்ளனர். எஞ்சிய தொகையில் கணிசமான எண், சுயமாக ஏதொ ஒரு நிலையில்லாத தொழில் புரியும் இக்கட்டில் உள்ளனர்.
இந்துக்களின் மேல் தீண்டாமையை மேற்கொண்டு, மற்றவர்களை புறந்தள்ளி, மேற்கண்ட அற்புதமான ஒரு வாழ்க்கத்தரத்தை எட்டியுள்ளனர் இந்திய முஸ்லிம்கள்.
கடலோர குப்பங்களிலும், நகரத்தின் சேரிகளிலும், கிராமத்தின் ஓரசாரங்களிலும், இந்துக்களின் உயர்சாதியிரை வராமல் தள்ளிவைத்து விட்டு தமக்கு மட்டுமே பட்டா போட்டு வாழ்வது முஸ்லிம்கள்தான்.
மேலும், பானைக்கு சோறு பதமாக, இவர்களின் தீண்டாமை காரணமாக, இந்தியாவின் தேசமுக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 0% மட்டுமே இருக்கின்றனர். எங்களின் கண்ணிற்கெட்டியவரையிலான சந்ததியில் முதல்முதலாக கல்லூரி வாசலில் கால்வைத்தவனாகவும், எங்களின் கண்ணிற்கெட்டியவரையிலான ஊர் முஸ்லிம்களில் உங்களை போன்று முஸ்லிம்களால் ஒடுக்கப்பட்டவர்களின் அழுகுரல் கேட்குமளவு உலக விஷயங்களை அறிந்தவனாகவும் விளங்க இந்துக்களின் மீது நான் சார்ந்த சமூகம் கொண்ட தீண்டாமைதான் காரணம்.
பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும், இன்னும் உலகமெங்கும், இந்துக்களின் மீது தீண்டாமை மேற்கொள்ளுவது உயர்தர வாழ்க்கை வாழும் இந்திய முஸ்லிம்கள்தான்.
உங்களை போன்ற 'உயர்குடி' பிஸ்தாம் ஐஸ்கிரீம் பேபிகளின் பார்வையில் நாங்கள் கையில் வைத்திருக்கும் கடலைமிட்டாய் கூட வெறுப்பு தரும் போது, அதை விட்டு தராமல், நீங்கள் தீண்டுவதை தடுக்க நினைக்கும் எங்களின் தீண்டாமை உங்களுக்கு அருவெருப்புதான்.
இது போன்று தீண்டாமை செய்யாமல் நாங்கள் அணைத்துச் செல்லும் பேரன்பு கொண்ட மற்ற இந்துச்சகோதர்களுக்கு புரியும் 'உண்மையான' தீண்டாமை