Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::  . -
5>&'5$ , 5'$
 4

CAT on the WALL     ி      : 5 / 18

Monday, May 22, 2006

அபூஆதில் பதிவில் இட்ட பின்னூட்டம்:

பதிவாளர் வைத்திருக்கும் மையக்கருத்துனுடைய வீரியத்திற்கு வலு சேர்ப்பது சிறக்கும். அதை விடுத்து டோண்டு, போலி டோண்டு, இஸ்ரேலிய கூட்டங்கள் என 'காலர் பிடிக்கும்' முறை, பதிவை நீர்க்க செய்ய வாய்ப்பளிக்கும். 'இஸ்லாமிய குப்பைகள் கிடைத்தால் என்கிருந்தாலும் அள்ளப்படும்' என்ற பலகையின் கீழ் முழுநேர மோசம் செய்து வரும் 'நேசத்தின்' போர்வையில் ஒளிந்திருப்பவரோடு, கணிசமான நேரங்களில் நல்ல கருத்துகளையும் எடுத்து வைக்கும் டோண்டு போன்றவரை ஒப்பிடுவதில் உடன்பாடில்லை.

'நேசம்' புகழ் மோசம் பல வேளைகளிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுவதாக 'தமாஷ்' பண்ணுவார். முஸ்லிம்கள் மேல் அவ்வளவு அக்கறை உள்ளவர், இந்த சமூகத்தில் பல தளங்களில் மிதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுடைய உண்ர்வுகளுக்கு வலு சேர்க்கும் விதமாகவோ, 'விழிப்புணர்வு' ஏற்படுத்தும் விதமாகவோ, துரும்பேணும் அள்ளி போட்டிருக்கிறாரா? உண்மையில் அதற்கு எதிர்ப்பு பறக்கும் இடங்களில், 'மோசங்களின்', 'ரவி சீனிவாஸங்களின்' அழுகுரல் வாக்குமூலம்தானே, இவர்களின் மூல விலாசங்களை புட்டு வைக்கிறது.

// ஒரு முஸ்லிமுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் தாய் தந்தையரை விட அதிக நேசத்துக்குரியவர்கள். அப்படியே ஒவ்வொரு மதத்தாருக்கும் இனத்தாருக்கும் யாரேனும் நேசத்துக்குரியவர்களாக இருக்கலாம். மறுப்பதற்கில்லை. எனவே, நாம் தமிழ் வலைப்பூ திரட்டி மேலாளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம், தாய் தந்தையர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் சம்பந்தப்படுத்தி மோசமாக எழுதுபவர்களின் பட்டியலில் இந்த மத துவேஷ காழ்ப்புணர்வாளர்களையும் வைக்க வேண்டும் என்பதைத் தான்.

//

ஒவ்வொரு பதிப்பிலும், தனிநபர் தாக்குதல் என்று இங்கு கண்டிக்கப்படும் விமர்சனங்களை விட மிக மோசமாக, தூதுவரை இகழ்ந்து, அவதூருகளையும், ஆபாசங்களையும் அள்ளி நிறைத்து குட்டிக்கரணம் போடும் இவர், அதேவேளையில், இவருடைய 'நம்பகத்தன்மையையும்' 'போலி கருத்துகளையும்' உணர்ந்து இவரை பொருட்டாக மதிக்காமல், 'வம்புகள்' வேண்டாமென்று விலகும் சகோதர்களை பார்த்து மருண்டு, 'முகமது என்றாலே புனிதம், பேசக்கூடாது என்று சண்டைக்கு வருகிறார்கள்' என, எல்லாம் செய்த பின்னும், உச்சஸ்தாயில் அலறி, எப்பாடுபட்டேனும் சகதிக்கு இழுக்க நினைக்கும் இந்த வாண்டுத்தனமான விஷமங்கள் கொள்ளை காமெடியை மிஞ்சும்.


// சரியாகப் புரிந்துகொண்டேன் என்று நான் அப்பதிவில் குறிப்பிட்டது, அவருடைய பதிவின் (உண்மையான) நோக்கத்தை புரிந்து கொண்டேன் என்பதே ஆகும் //

நண்பர் சிபியின் இந்த கூற்றைக்கூட கண நேரத்தில் அதே பதிவில் வில்லங்கமாக திசைதிருப்பும் இந்த 'நம்பகமானவர்' 'முஸ்லிம் விழிப்படைவதில் அக்கரையுடையவர்' பன்னூறு ஆண்டுகள் முந்திய இறைத்தூதுவரின் வாழ்க்கையை விமர்சிக்கும் விதத்தில் எந்த விதமான 'நம்பகத்தன்மையை' பெறுவார் என்பதை வாசிப்பவர்களிடமே விட்டு விடுகிறேன்.

அதே நேரத்தில், நண்பர் இறைநேசன் சொல்லியது போல 'மோச'குமாரர்களின் நெடுஞ்சாலை சினிமா போஸ்டர் பிரச்சாரத்தை கவனிப்பதில் நேரம் விரயம் செய்யாதீர்கள் என்பதை ஆமோதிக்கிறேன்.

1 Comments:

Blogger வாசகன் said...

சல்மான் அய்யா
உங்கள் எழுத்தில் நல்ல முதிர்ச்சி இருக்கிறது. ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை.
வேறொரு பதிவின் வழிகாட்டலில் தான் இப்பதிவை நான் இன்று தான் கண்டுகொண்டேன்.

நேச குமார் போன்ற சிலர் பணக்காரணத்தாலோ அல்லது தன் மனக்காரணத்தாலோ தான் வெறுப்பு உமிழும் பதிவுகளை எழுதி, தமிழின் வலைப்பக்கங்களை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். அத்தகையவர்களை அம்பலப்படுத்துவதற்காக அல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு புரியவைப்பதற்காகவேனும் உங்களைப்போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

2:41 PM  

Post a Comment

<< Home