Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::  . -
5>&'5$ , 5'$
 4

CAT on the WALL     ி      : 5 / 18

Monday, May 22, 2006

தீண்டாமையால் பாதிக்கப்பட்ட 'தாழ்த்தப்பட்ட' ஜயராமனுக்கு ஆறுதல் கடிதம்

கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள், இந்திய சிறுபான்மையினரின் தீண்டாமை கொள்கையால் பாதிக்கப்பட்ட நண்பர் ஜயராமனுக்கு மகிழ்ச்சி அளித்து, அவரின் புண்பட்ட நெஞ்சை, ஒடுக்கப்பட்ட மக்களுடைய கருகும் வாழ்க்கையின் புகை விட்டும் ஆற்றும் விதமாக அமையும் என நம்புகிறேன்

நண்பர் ஜயராமனின் இந்த பதிவிற்கு இட்ட பின்னூட்டம்:

இந்திய சமூகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களில் அவர்களின் மக்கள்தொகைக்கான விகிதாச்சாரத்தை விட அதிகமாக உள்ளவர்கள் முஸ்லிம்கள் என ஐ.நா 2003 பின்தங்கிய நாடுகளின் மனித வாழ்க்கைத்தரம் ஆய்வறிக்கை குறிக்கிறது. 2002-ல் வெளியான ஹிந்து பத்திரிகையின் சிறப்பு பகுதியில் சராசரி முஸ்லிமின் அவல வாழ்க்கை படம் பிடித்து காட்டப்படுகிறது. தமிழகத்தில் அரசு கணக்கின்படி 13% உள்ள முஸ்லிம் சமுதாயம் அரசு வேலை, கல்லூரி கல்வி இவற்றில், 2% க்கும் குறைவாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 30% தமிழக முஸ்லிம்கள் நடைபாதை, தள்ளுவண்டி தினசரி தொழிலாளர்களாக உள்ளனர். எஞ்சிய தொகையில் கணிசமான எண், சுயமாக ஏதொ ஒரு நிலையில்லாத தொழில் புரியும் இக்கட்டில் உள்ளனர்.
இந்துக்களின் மேல் தீண்டாமையை மேற்கொண்டு, மற்றவர்களை புறந்தள்ளி, மேற்கண்ட அற்புதமான ஒரு வாழ்க்கத்தரத்தை எட்டியுள்ளனர் இந்திய முஸ்லிம்கள்.
கடலோர குப்பங்களிலும், நகரத்தின் சேரிகளிலும், கிராமத்தின் ஓரசாரங்களிலும், இந்துக்களின் உயர்சாதியிரை வராமல் தள்ளிவைத்து விட்டு தமக்கு மட்டுமே பட்டா போட்டு வாழ்வது முஸ்லிம்கள்தான்.
மேலும், பானைக்கு சோறு பதமாக, இவர்களின் தீண்டாமை காரணமாக, இந்தியாவின் தேசமுக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 0% மட்டுமே இருக்கின்றனர். எங்களின் கண்ணிற்கெட்டியவரையிலான சந்ததியில் முதல்முதலாக கல்லூரி வாசலில் கால்வைத்தவனாகவும், எங்களின் கண்ணிற்கெட்டியவரையிலான ஊர் முஸ்லிம்களில் உங்களை போன்று முஸ்லிம்களால் ஒடுக்கப்பட்டவர்களின் அழுகுரல் கேட்குமளவு உலக விஷயங்களை அறிந்தவனாகவும் விளங்க இந்துக்களின் மீது நான் சார்ந்த சமூகம் கொண்ட தீண்டாமைதான் காரணம்.
பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும், இன்னும் உலகமெங்கும், இந்துக்களின் மீது தீண்டாமை மேற்கொள்ளுவது உயர்தர வாழ்க்கை வாழும் இந்திய முஸ்லிம்கள்தான்.
உங்களை போன்ற 'உயர்குடி' பிஸ்தாம் ஐஸ்கிரீம் பேபிகளின் பார்வையில் நாங்கள் கையில் வைத்திருக்கும் கடலைமிட்டாய் கூட வெறுப்பு தரும் போது, அதை விட்டு தராமல், நீங்கள் தீண்டுவதை தடுக்க நினைக்கும் எங்களின் தீண்டாமை உங்களுக்கு அருவெருப்புதான்.
இது போன்று தீண்டாமை செய்யாமல் நாங்கள் அணைத்துச் செல்லும் பேரன்பு கொண்ட மற்ற இந்துச்சகோதர்களுக்கு புரியும் 'உண்மையான' தீண்டாமை

0 Comments:

Post a Comment

<< Home